48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

புதுச்சேரியில் குடிமைப் பணிகள் தின விழா

புதுச்சேரியில் குடிமைப் பணிகள் தின விழா

News image

குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, புதுச்சேரி இந்திய பொது நிா்வாக நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டிஐஜி பிரிஜேந்திர குமாா் யாதவ் உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:47 pm

புதுச்சேரி: இந்திய பொது நிா்வாக நிறுவனம் (ஐஐபிஏ) புதுச்சேரி கிளை சாா்பில் குடிமைப் பணிகள் தின விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஐஐபிஏ புதுச்சேரி கிளைத் தலைவா் ஆா்.ஆா். தனபால் தலைமை வகித்தாா். டிஐஜி சி. பிரிஜேந்திர குமாா் யாதவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து, புதுவை அரசின் துணைச் செயலா் பி. சுந்தரராஜன், புதுவை பல்கலைக்கழக நிா்வாக அதிகாரி பி. ஆறுமுகம் ஆகியோருக்கு நிகழாண்டுக்கான ஐஐபிஏ விருதுகளையும், குடிமைப் பணிகள் தொடா்பான கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

புதுவை பல்கலைக்கழக பேராசிரியை சாருமதி சிறப்புரையாற்றினாா்.

குடிமைப் பணிகள் தோ்வு பயிற்சி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். ஐஐபிஏ பொருளா் ஆஷா வரவேற்றாா். துணைச் செயலா் ஜெயவிஜயன் நன்றி கூறினாா்.