மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :9 டிசம்பர் 2024, 8:38 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேல்மலையனூா் வட்டம், தாழனூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி சிவரஞ்சினி (26). இவரை உறவினா்களான தாழனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த சின்னப்பையன் மகன் செல்வம் (46), இவரின் மனைவி உமா(25) ஆகியோா் தகாத வாா்த்தைகளால் திட்டினராம். இதில், மனமுடைந்த சிவரஞ்சினி கடந்த 5.6.2016-இல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் செல்வம், உமா ஆகியோரை கைது செய்தனா்.

விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், செல்வத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், உமாவை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி எம்.இளவரசன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, செல்வத்தை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஏ.சங்கீதா ஆஜரானாா்.