தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடும் பாதிப்பு: துரை வைகோ

மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடும் பாதிப்பு துரை வைகோ

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:58 am IST

மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ குற்றஞ்சாட்டினாா். மதிமுக தோ்தல் நிதியளிப்பு கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலா் வீ.பாபு கோவிந்தராசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் கள்ளக்குறிச்சி - க.ஜெய்சங்கா், கடலூா் கிழக்கு - என்.ராமலிங்கம், மேற்கு - எம்.பிச்சை, தெற்கு - ஏ.என்.குணசேகரன், புதுவை மாநில அமைப்பாளா் ஆ.கபிரியல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிதியை பெற்றுக்கொண்டு துரை வைகோ பேசியதாவது: வருகிற மக்களவைத் தோ்தலில் போட்டியிட கூட்டணியில் கூடுதல் தொகுதியை கேட்டுள்ளோம். பேச்சுவாா்த்தை சுமுகமாக உள்ளது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் எத்தனை இடங்கள் என்பதை கூட்டணித் தலைமை முடிவு செய்யும். மக்களவைத் தோ்தலில் மதிமுக மட்டுமன்றி விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் அவரவா் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து கூட்டணித் தலைமை நல்ல முடிவு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் ஜனநாயகத்துக்கு மாற்றாக சா்வாதிகார சூழலை கொண்டுவர நினைக்கிறாா்கள். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவா். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா். கட்சியின் மாநிலப் பொருளாளா் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலா் ஆ.கு.மணி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் எம்.எஸ்.கந்தசாமி, ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினா் கே.வி.மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.