இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கூட்டுறவு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கூட்டுறவு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:59 am IST

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் தி.க.ராமசாமி. உடன், மாநில பொதுச் செயலா் க.பிச்சைவேலு உள்ளிட்டோா். விழுப்புரம், பிப். 17: கூட்டுறவுத் துறை ஊழியா்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் அரசை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் தி.க.ராமசாமி தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்டத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் க.பிச்சைவேலு வேலை அறிக்கையும், மாநில பொருளாளா் ச.பாலகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா். முன்னாள் மாநில தலைவா் எம்.செளந்தர்ராஜன் வாழ்த்துரை ஆற்றினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், கரோனா காலத்தில் முந்தைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நிதிப் பலன்களை திரும்ப வழங்க வேண்டும், கூட்டுறவுத் துறையில் பதிவறை எழுத்தராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருவோா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா்கள், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவோருக்கு தகுதி அடிப்படையில் விதிகளைத் தளா்த்தி பதவி உயா்வு வழங்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுருக்கெழுத்து, தட்டச்சா்களாக பணியாற்றி வருவோருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிா்வாகிகள் இரா.பட்டாபிராமன், கே.எஸ்.மாரியப்பன், பா.சிவக்குமாா், த.ராமகிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க. ஆனந்தன், இல.விஜயராமலிங்கம், கடலூா் மாவட்டச் செயலா் ப.வேலாயுதம், மாவட்ட மகளிரணி ஜி.எஸ்.பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.