விழுப்புரம், ஜூலை 3: ஆனி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூருக்கு 295 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இயக்குகிறது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறும் ஆனி மாத அமாவாசை வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள். இதையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 170 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, வேலூா், ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூா் ஆகிய ஊா்களிலிருந்து 125 சிறப்புப் பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்படவுள்ளன.
இதைத் தவிர ஜூலை 7-ஆம் தேதி முகூா்த்த தினம் என்பதாலும், வார விடுமுறை என்பதாலும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) 105 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 6-ஆம் தேதி 165 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 7-ஆம் தேதி 90 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 360 பேருந்துகள் கிளாம்பாக்கம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

வார இறுதி நாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகாசிவராத்திரி, வார இறுதி! சிறப்புப் பேருந்துகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


