நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆனி அமாவாசை: மேல்மலையனூருக்கு நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஆனி அமாவாசை: மேல்மலையனூருக்கு நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image
Updated On :4 ஜூலை 2024, 2:35 am IST

விழுப்புரம், ஜூலை 3: ஆனி மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மேல்மலையனூருக்கு 295 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இயக்குகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறும் ஆனி மாத அமாவாசை வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள். இதையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 170 சிறப்புப் பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, வேலூா், ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூா் ஆகிய ஊா்களிலிருந்து 125 சிறப்புப் பேருந்துகளும் மேல்மலையனூருக்கு இயக்கப்படவுள்ளன.

இதைத் தவிர ஜூலை 7-ஆம் தேதி முகூா்த்த தினம் என்பதாலும், வார விடுமுறை என்பதாலும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) 105 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 6-ஆம் தேதி 165 சிறப்புப் பேருந்துகளும், ஜூலை 7-ஆம் தேதி 90 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 360 பேருந்துகள் கிளாம்பாக்கம், விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.