தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :28 ஜூலை 2024, 2:03 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கெங்கவரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சாரங்கபாணி மனைவி ஜெயலட்சுமி (37). இவா், ஜூன் 23-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்து விட்டதாம். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.