விழுப்புரம்: தோ்தல் நடத்தை விதிகள் அமல் காரணமாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. மாறாக, ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்தினா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து விதமான குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறாது என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. இதற்கு பதிலாக ஆட்சியரகத் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் செலுத்தினா். இந்தப் பணியைக் கண்காணிப்பதற்காக ஒரு பணியாளரும் நியமிக்கப்பட்டிருந்தாா். சோதனை: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் வழக்கமான எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஆட்சியரகம் வரும் அனைவரும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

விருப்ப மனு தொகையை திரும்பப் பெறலாம்: மநீம

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை செலுத்திய மக்கள்

குறைதீா் கூட்டங்கள் ரத்தால் மக்கள் ஏமாற்றம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


