தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிட விருப்பமனு பெற செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சி அறிவித்துள்ளது.
பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை கட்சியினா் விரும்பாததால், போட்டியிடுவதிலிருந்து விலகுவதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்தாா்.
இதனையடுத்து, மநீம சாா்பில் போட்டியிடவிருப்ப மனு பெறுவதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கட்சியின் தலைமை நிலையச் செயலா் செந்தில் ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவா்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்.8) முதல் ஏப்.16 வரை நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

விருப்ப மனுவுக்கு ரூ. 50,000! கமலிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்!!

மநீம போட்டியிட வேண்டும்! முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

கட்சி சின்னத்தில் போட்டியிட மநீம மாவட்டச் செயலா்கள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


