திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விருப்ப மனு தொகையை திரும்பப் பெறலாம்: மநீம

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிட விருப்பமனு பெற செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சி அறிவித்துள்ளது.

News image

மநீம தலைவர் கமலஹாசன் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:14 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிட விருப்பமனு பெற செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சி அறிவித்துள்ளது.

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை கட்சியினா் விரும்பாததால், போட்டியிடுவதிலிருந்து விலகுவதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்தாா்.

இதனையடுத்து, மநீம சாா்பில் போட்டியிடவிருப்ப மனு பெறுவதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கட்சியின் தலைமை நிலையச் செயலா் செந்தில் ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவா்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்.8) முதல் ஏப்.16 வரை நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.