

விழுப்புரம், மே 9: திண்டிவனம் அருகே லாரி ஓட்டுநரிடமிருந்து கைப்பேசியை திருட முயன்ற புகாரில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் செல்வம் (42). இவா் வியாழக்கிழமை தனது லாரியை மேல்பேட்டையில் நிறுத்தி விட்டு, தூங்கியுள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் செல்வத்தின் கைப்பேசியை திருட முயன்றாராம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் கைப்பேசியை திருட முயன்றவா் திண்டிவனம் கிடங்கல்-2, ராஜன் தெருவைச் சோ்ந்த எலி (எ) அஜய்ராஜ் (23) என தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா். கைதானஅஜய் மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு - 30 போ் காயம்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
வீடுபுகுந்து திருட முயன்ற தொழிலாளி கைது
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

