மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

News image
Updated On :10 மே 2024, 6:24 pm

Din

விழுப்புரம், மே 10: விழுப்புரம் அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண் கூலித் தொழிலாளியிடம் 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பாா்ப்பனப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி புவனேசுவரி (38), கூலித் தொழிலாளி. இவா், தனது கணவருடன் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள அய்யூா்அகரம் மேம்பாலம் அருகே வெங்கடேசன் சென்றபோது, பின்னால் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த சுமாா் 30 வயது இளைஞா், புவனேசுவரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச்

சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.