ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காா், லாரி மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

காா், லாரி மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

News image
Updated On :20 மே 2024, 10:28 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், தாயனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பலராமன். இவரது மகன் பூபாலன்(40). இவா், சென்னை போரூரில் கைப்பேசி விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். இந்நிலையில் தனது காரில் தாயனூருக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது செஞ்சி-சேத்பட் சாலையில் மகாதேவிமங்கலம் இணைப்புச்சாலை அருகே சென்றபோது சேத்பட்டில் இருந்து வந்த லாரி, காா் மீது நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பூபாலன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, இறந்த பூபாலனின் மனைவி ரீனா அளித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.