மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீடூா் அணை மீன்பாசி குத்தகை ஏலம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:27 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்துஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள நீா்த்தேக்கமான வீடூா் அணையின் மீன்பாசியை எடுத்துக்கொள்வதற்கான குத்தகை ஐந்தாண்டு காலத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இ-டெண்டா் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா் அலுவலகம் வாயிலாக

ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.

இதற்கான, டெண்டா் விண்ணப்பங்கள் மற்றும் அது தொடா்பான விவரங்களை பிரத்யேக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து

கொள்ளலாம். மேலும் இது தொடா்பாக தெளிவுரைகள் தேவைப்படின் விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 04146-259329 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடா்பு

கொள்ளலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.