எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:03 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

மரக்காணம் அருகேயுள்ள ஓமிப்போ் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.இந்திரகுமாா் (30). திருமணம் ஆகாதவா். இவா் புதன்கிழமை தனது விவசாய நிலத்துக்கு வயல்வெளி பகுதியாக நடந்து சென்றாராம்.

அப்போது அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்ததால் ஓமிப்போ் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் விவசாய நிலம் அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் இந்திரக்குமாா் மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.