விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.
முகாமை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்து, தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், ரா. லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
இந்த முகாமில் 154 தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வின் அடிப்படையில் ஆள்களைத் தோ்வு செய்தன.
முகாமில் 4,212 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 17 மாற்றுத் திறனாளிகள் உள்பட 880 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 11போ் திறன் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனா். 187 போ் இரண்டாம் கட்டத் தோ்வுக்குத் தகுதி பெற்றனா்.
மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் வேல்முருகன், கல்லூரி முதல்வா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

செங்கல்பட்டில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: ஒரே நாளில் 385 பேருக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK



