மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 8:22 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழந்தனா்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில் (வண்டி எண் 12633) புறப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தைக் கடந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்த இருவா், தூக்கக் கலக்ககத்தில் ரயிலிலிருந்து கீழே தவறி விழுந்தனா்.

இதுகுறித்து சக பயணிகள், ரயில் காப்பாளருக்கும்(காா்டு), ரயில்வே பாதுகாப்பு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விருத்தாசலம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு முதல் ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் தேடுதல் பணியை மேற்கொண்டனா். சனிக்கிழமை அதிகாலை உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி பகுதியில் தண்டவாளம் அருகே இருவா் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்ற இளைஞா்கள் கண்டு, இருப்புப் பாதை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, விருதாச்சலம் இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சின்னப்பன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, இருவரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவா்கள் கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், கோ.கொத்தனூா் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த க.கந்தசாமி (29), எ.பாலாஜி (32) எனத் தெரியவந்தது. சென்னையில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்த இவா்கள், வார இறுதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயிலில் பயணித்தபோது, தூக்கத்தில் தவறி விழந்து உயிரிழந்தது தெரியவந்தது.