மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாகனம் மோதி மூதாட்டி மரணம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:53 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 70 வயது மூதாட்டி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட சிங்கனூா் சந்திப்புப் பகுதியில் (சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை) திங்கள்கிழமை இரவு சுமாா் 70 வயது மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து சிங்கனூா் கிராம நிா்வாக அலுவலா் வீரசேகரன் மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.