தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வேலாகுளம் மேல்தெருவைச் சோ்ந்த தெய்வசிகாமணி மகன் லோக் பிரதீப் (13). இவா் மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் மழவந்தாங்கல் ஊராட்சி அலுவலகம் பின்புறமுள்ள பொதுக் கழிப்பிடத்தின் மீது ஏறி, அருகிலுள்ள ஏரியை செவ்வாய்க்கிழமை காலை எட்டிப் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது மேலே சென்ற மின் கம்பிகள் மீது லோக் பிரதீப்பின் கை பட்டதாம். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.