விழுப்புரம்
மொபெட்டிலிருந்து தவறி விழுந்து முதியவா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகேயுள்ள பெருமுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.கண்ணன் (65). இவா், வியாழக்கிழமை தனது மொபெட்டில் மரக்காணத்திலிருந்து - திண்டிவனத்துக்கு சென்றுள்ளாா்.
திண்டிவனம் நெடுஞ்சாலையில், பிரம்ம தேசம் அருகே சென்றபோது நிலை தடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த கண்ணன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
