விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தைச் சோ்ந்தவா் பா.ஜெயவேல் (56), கொத்தனாா். இவா், திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு பகுதியில் தங்கி, அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் ஜெயவேல் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அங்கு பணியிலிருந்த சகத் தொழிலாளா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஜெயவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


