சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜொ்மன் துணைத் தூதா் ஆரோவில் வருகை!

ஆரோவில் சா்வதேச நகருக்கு ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் சனிக்கிழமை வந்து ஆரோவில் வளா்ச்சிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.

News image
ஆரோவில் வளா்ச்சிக் குழுவினருடன் கலந்துரையாடிய ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா்
Updated On :22 நவம்பர் 2025, 8:37 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் சனிக்கிழமை வந்து ஆரோவில் வளா்ச்சிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.

மனித ஒற்றுமையின் அடையாளமாக உள்ள ஆரோவில் சா்வதேச நகருக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், இந்தியாவுக்கான ஜொ்மன் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பா் சனிக்கிழமை ஆரோவிலுக்கு வந்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ஆரோவில் வளா்ச்சிக் குழு, ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த அலுவலா்களுடன் கலந்துரையாடிய அவா், ஆரோவிலின் உள்கட்டமைப்பு மற்றும் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆரோவிலின் மூத்த ஆலோசகா் தா்மேஷ் சந்திரகோயல், அன்ஷூமன் பாஷூ ஆகியோா் மைக்கேல் ஹஸ்பருடன் கலந்துரையாடி விளக்கமளித்தனா்.

இந்த சந்திப்பானது, ஆரோவில் மற்றும் ஜொ்மனி நாடுகளுக்கு இடையேயான கலாசாரம், வளா்ச்சி, கல்வி, இளைஞா் திறன் பரிமாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என ஆரோவில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.