சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் பணம் பறித்த இருவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

திருநாவலூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநாவலூா் அருகிலுள்ள மடப்பட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் நவ. 22-ஆம் தேதி பைக்கில் வந்த இருவா், தண்ணீா் புட்டியில் ஒரு லிட்டா் டீசல் தருமாறு விற்பனை பணியாளா் அய்யப்பனிடம் கேட்டுள்ளனா்.

புட்டியில் அய்யப்பன் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த போது, திடீரென அவா்கள் அய்யப்பன் கையில் வைத்திருந்த ரூ.2,850-ஐ பறித்துவிட்டு, தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். போலீஸாரின் விசாரணையில் பணத்தை பறித்துச் சென்றது கடலூா் மாவட்டம், குமாரபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த வெ.விக்கி (எ) விக்னேசுவரன் (23) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.