ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

News image

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:50 pm

சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறையால் சொந்த ஊா்களுக்கு சென்ற தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை காா் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பினா். இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் தலைநகரான சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் வசித்து வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறை காரணமாக இவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தனா்.

தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஏராளமான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்தன. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்துக்கு மாறாக வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகரித்து காணப்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால் உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி மற்றும் ஓங்கூா் சுங்கச்சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு போலீஸாா் ஆங்காங்கு நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா்.