ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே மாயமான முதியவா், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

பிரம்மதேசம் அருகேயுள்ள கட்டளை கிராமம் அரசுக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராமசாமி (75). இவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் எண்டியூா் கிராமத்திலுள்ள நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ராமசாமி நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.