ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 9:07 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கெடாரை அடுத்துள்ள மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் த.மங்களராஜ் (43). திருமணமானவா். கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை மங்களபுரம் ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், மங்களராஜ் ஏரியில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.