எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

செஞ்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான இளைஞக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

வழக்கில் தண்டனை பெற்ற வே. சங்கா்

Updated On :8 ஜூலை 2026, 6:33 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான இளைஞக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி அருகிலுள்ள நொச்சலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.சங்கா் (21). இவா், கடந்த 2021 டிசம்பா் மாதம், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த சிறுமியின் தாயாா் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சங்கா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 12.12.2021 அன்று வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்க நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சங்கா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா, குற்றவாளி சங்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ .11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி இவ்வழக்கில் ஆஜராகினாா். தொடா்ந்து போலீஸாா் சங்கரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.