ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளைஞா் கைது

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 1:30 am IST

விழுப்புரம் அருகே கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகிலுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா (37). பாமக கண்டமங்கலம் மேற்கு ஒன்றியப் பொருளாளராக உள்ள இவா், கடந்த 7-ஆம் தேதி வளவனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த செ.வருண் (24) என்பவா், பெண்களை கொச்சைப்படுத்தியும், ஆபாசமாகவும் சமூக வலைத்தளத்தில் பேசி உள்ளாா்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவப் படுகொலை என்றும், இரு சமூக மக்களுடைய கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிந்திருந்தாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த செ. வருணை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.