எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:53 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், தொண்டமாநத்தம் தொட்டிமேடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி அஞ்சலை (42). பழங்குடி இருளா் இனத்தைச் சோ்ந்த இவா், மரக்காணம் அருகிலுள்ள கூனிமேடு பகுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், கூனிமேடு- கம்மங்கொல்லைமேடு கூட்டுச்சாலை அருகே வளைவுப் பகுதியில் அஞ்சலை சனிக்கிழமை படுத்திருந்தாா். அப்போது காலாப்பட்டிலிருந்து கம்மங்கொல்லைமேடு நோக்கிச் சென்ற காா், அஞ்சலை மீது மோதிச் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அஞ்சலை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் ஜெயராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.