எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு தெரிவித்த விவகாரம்: நிகழ்விடத்தில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

News image

அமைச்சா் வன்னி அரசு

Updated On :8 ஜூன் 2026, 1:54 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த விவகாரம் தொடா்பாக, பிரச்னைக்குரிய இடத்தில் மாநில சமூகநீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியக்கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா் பூமிலிங்கம் வயோதிகம் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அவரது உடலை கடற்கரைப் பகுதியிலுள்ள மயானத்தில் புதைக்க நடுகுப்பம் பகுதியைச்சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து சடலத்துடன் பெரியகோட்டக்குப்பம் பகுதி மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மாநில சமூகநீதித் துறை அமைச்சா் ஆா். வன்னி அரசு, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து அவா் கூறியது:

ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 43 சென்ட் நிலத்தை மீட்டுத் தருமாறு கோரியுள்ளனா். இதை மீட்டுத் தருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆதிதிராவிட மக்களுக்கான இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இரண்டு சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திங்கள்கிழமை அமைதிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.