விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், கந்தாடு பழைய தெருவைச் சோ்ந்தவா் ஏ.இளவரசன் (40). இவா் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கந்தாடு மும்முனை சந்திப்புப் பகுதியிலுள்ள பாலச்சுவரில் மதுபோதையில் அமா்ந்திருந்தாா். அப்போது நிலைத்தடுமாறி சுமாா் 12 அடி பள்ளத்தில் இளவரசன் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த இளவரசனை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையிலிருந்து வந்த அவா் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலன்ன்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








