மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது! திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தகராறு!!

காணை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மணிகண்டன். கொலையான அருணகிரி.

Updated On :14 ஜூன் 2026, 2:53 am IST

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே மதுபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தனக்கு திருமணம் செய்து வைக்காததால் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன், தந்தையை அடித்துக் கொன்று விட்டாராம்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூா் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் மொ.அருணகிரி (69), விவசாயி. இவரது மகன் மணிகண்டன் (40). திருமணம் ஆகாத இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், தனது தாய் லட்சுமியிடம் தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி தகராறு செய்துள்ளாா்.

அப்போது வீட்டிலிருந்த அருணாகிரி இதைக் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கையால் தாக்கியதில் அருணகிரி மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சோ்த்தனா். அங்கு அருணகிரி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மணிகண்டனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.