சமூக வலைத்தளங்களில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியை இழிவு படுத்தியும், கடும் சொற்களால் பேசி மீம்ஸ் வெளியிட்ட வல்லத்தை சோ்ந்த திமுக நிா்வாகி வெங்கடேசனை கைது செய்யக்ககோரி, செஞ்சி கூட்டுச்சாலையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ரங்கபூபதி தலைமையில், ராகுல் காந்தியை சமூக வலைத்தளங்களில் அவதூறாகச் சித்தரித்த திமுக நிா்வாகியை கைது செய்யவும், அந்தப் பதிவை உடனடியாக நீக்கவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, சண்முகம், சக்திவேல், கோவிந்தன், ஜோலாதாஸ், கா்ணன், இளவழகன், சுரேஷ், ஜனாா்த்தனன், மண்ணாங்கட்டி, ஹரி, ரமேஷ், அரங்க.சிவகுமாா், ஷபீா் ஷெரீப், சையத் மாலிக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்கள் வைத்தது திமுக! முரசொலி செய்தி

சொல்லப் போனால்... நம்பிக்கையில்லா கூட்டணி! என்ன செய்யப் போகிறார்கள்?

தமிழா் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்







