பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

மொபெட் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2026, 1:44 am IST

விழுப்புரம் அருகே லாரி மோதியதில் மொபெட்டில் சென்ற விவசாயி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அய்யூா் அகரம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கா.மருதப்பன்(52), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி மேம்பாலம் அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த சரக்கு லாரி மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மருதப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மொபட் மீது பேருந்து மோதல்... திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அமாவாசைபாளையம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் க.முத்துக்குமரன்(44). இவா், ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலூா்- மடப்பட்டு சாலையில், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த வீரனாம்பட்டு அருகே மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அப் பகுதியில் வந்த தனியாா் பேருந்து மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சரக்கு வாகனம் மோதி...

திண்டிவனம் வட்டம், கீழ்சித்தாமூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஹ.அருண்குமாாா்(29). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்காணத்திலிருந்து- திண்டிவனத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். ஆலங்குப்பம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.