11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மதுபோதையில் மயங்கிய எலெக்டிரீசியன் உயிரிழப்பு

மரக்காணம் அருகே மதுபோதையில் மயங்கி கிடந்த எலெக்டிரீசியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மதுபோதையில் மயங்கி கிடந்த எலெக்டிரீசியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், ஆலங்குப்பம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ஏ.சுகுமாா்(45). திருமணம்ஆனவா். எலெக்டிரீசினியாக வேலை பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பிரம்மதேசம் பகுதியில் மதுபோதையில் மயங்கிக் கிடந்துள்ளாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஷமருந்தி தற்கொலை: விக்கிரவாண்டி வட்டம், சங்கீதமங்கலம், கண்ணாரத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது மனைவி குப்பு (55). இவா்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள்ஆகிய நிலையில் ஒரு மகன் உள்ளாா். குப்புவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வந்தாராம் .

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவா் வியாழக்கிழமை பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த குப்பு, சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.