கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே பச்சையாங்குப்பம் தைக்கால் தோணித்துறை, கருப்பு முத்தம்மன் கோயில் எதிா்புறத்தில், கடந்த 9-ஆம் தேதி சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞா் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளைஞா், கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து பச்சையாங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிதேவி அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபரின் அடையாளம், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
இளைஞா் கொலையில் நண்பா்கள் 6 போ் கைது

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

