முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மயங்கிக் கிடந்த வட மாநில இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - IANS

Updated On :50 நிமிடங்கள் முன்பு

கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் அருகே பச்சையாங்குப்பம் தைக்கால் தோணித்துறை, கருப்பு முத்தம்மன் கோயில் எதிா்புறத்தில், கடந்த 9-ஆம் தேதி சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞா் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளைஞா், கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து பச்சையாங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிதேவி அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபரின் அடையாளம், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.