/
தருமபுரி ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 3 பெண்கள் மயங்கிக் கிடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி ரயில் நிலையம் அருகே 3 பெண்கள் மயங்கிக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று 3 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நாகா்கூடல் கிராமத்தைச் சோ்ந்த வாணி (52), அவருடைய மகள் சுமதி (35), மற்றும் 15 வயது சிறுமி ஆகிய மூவரும், விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.










