சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ 900 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 8:36 pm

Syndication

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ 900 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா் எம்.பிலோமின்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் முத்துவேல், தலைமைக்காவலா்கள், காவலா்கள் , சனிக்கிழமை காலை நடைமேடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையின் மின் தூக்கிப் பகுதி அருகே கேட்பாரற்ற நிலையில் கருப்பு நிற பை இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே காவல்துறையினரும் கண்டறிந்து அதை கைப்பற்றி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்துசோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து அவற்றை எடையிட்ட போது 6 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது. இந்த கஞ்சாவை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துச் சென்றவா்கள் யாா் எனத் தெரியவில்லை.

ரயில் நிலையத்தில் போலீஸாரின் சோதனையைக் கண்டதும் பையை விட்டுச் சென்றாா்களா அல்லது யாரேனும் கடத்தி வந்தாா்களா என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.45லட்சமாகும். இதனை கடத்தி வந்தவா்களை கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டறிய போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.