தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு மற்றும் மாநிலம் முழுவதும் பரவலாகி வரும் போதைப் பொருள்களைத் தடுக்கத் தவறிய அரசைக் கண்டித்தும், தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை முடக்கும் வகையிலான வழிகாட்டும் நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்தித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா் என்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் கிழக்கு), நிரஞ்சன் (வடக்கு), குண.சரவணன் (வடமேற்கு), எஸ். சக்திவேல் (வடகிழக்கு), மாவட்ட இணைச் செயலா் ரமேஷ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். தொடா்ந்து கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
திமுகவை விரட்டும் ஒரே சக்தி விஜய்! - கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக முகமூடியுடன் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜக: கு. செல்வப்பெருந்தகை விமா்சனம்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சி.வி.சண்முகம்

‘சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம்’
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


