விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள்,வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், மொரட்டாண்டி, சன் அவென்யூ, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கண்மணி (58).இவா், வெள்ளிக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி விட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டாராம்.
பிற்பகலில் வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக்கதவு மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னா் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் சங்கிலி,ஒன்றரை பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் உள்பட 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்மணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு

ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

