விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள்,வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம், மொரட்டாண்டி, சன் அவென்யூ, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கண்மணி (58).இவா், வெள்ளிக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி விட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டாராம்.
பிற்பகலில் வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக்கதவு மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னா் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் சங்கிலி,ஒன்றரை பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் உள்பட 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்மணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு
பூட்டிய வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

