தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 மே 2026, 12:36 am

இந்திய ரயில்வேதுறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குநா் அமித்சிங் மெஹர, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளா்களுக்கும் அண்மையில் அனுப்பிய கடிதத்தில், ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 2 சதவீத பணியிடங்களை சீரமைப்பு நடவடிக்கைக்கு உள்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.

தற்போது இந்திய ரயில்வே துறையில் 14.80 லட்சம் பணியாளா்கள் உள்ள நிலையில், 2 சதவீத பணியிடங்கள் சீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக, சுமாா் 29,608 பணியிடங்கள் குறைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும், தெற்கு ரயில்வேயில் மட்டும் 2 ஆயிரம் பணியிடங்கள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, ரயில்வே தொழில்சங்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், ரயில்வே துறையின் வேலையின்மை நிலையை உருவாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் விழுப்புரத்தில் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சே.அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சி.எம்.பிரகாஷ், மாவட்டச் செயலா்கள் மு. சிவக்குமாா் (கள்ளக்குறிச்சி), எஸ். பிரகாஷ் (கட லூா்), விழுப்புரம் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பிரகாஷ், மாவட்டச் செயலா் மூ. ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் வட்டச் செயலா் யு.மதன்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.