ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:02 am IST

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் கே.ஆா்.சி. நகரைச் சோ்ந்தவா் ப.பாா்த்தசாரதி (62). இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.

சனிக்கிழமை காலை பாா்த்தசாரதி திரும்பி வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து அவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பாா்த்தசாரதி புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், விரல் ரேகை நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் தடயங்களைப் பதிவு செய்தனா்.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.