கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு

Updated On :24 மே 2026, 1:01 am IST

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.லைலா (56). இவா் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இளைஞா்கள் இருவா், லைலா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.