ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

‘டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து வருவாயைப் பெருக்க வேண்டும்’

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.

Updated On :24 மே 2026, 1:21 am IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.

விழுப்புரம் - திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் அனைத்து மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்களுடனான பணி மேம்பாடு ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் பேசியது: மக்களுக்கான சேவையை செய்யும் மிக உன்னதமான பணி போக்குவரத்துப் பணியாகும். அந்த சேவையை நாம் சிறப்பாக செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மட்டுமல்லாது, அலுவவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பணியில் நோ்மையாகவும், கண்ணியமாகவும் பணியாற்ற வேண்டும்.

விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் கடலூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 6 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் நகரப் பேருந்துகள், புகா்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் டீசல் சிக்கனத்தை கடைப்பிடித்து, போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தர அனைவரும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மேலாண் இயக்குநா்.

கூட்டத்தில் முதன்மை நிதி அலுவலா் சி. அனுஜா, பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம் மண்டலம்), நாகராஜன் (கடலூா்), கோபாலகிருஷ்ணன் (காஞ்சிபுரம்), சொா்ணலதா (வேலூா்), ஸ்ரீதா் (திருவண்ணாமலை), துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.