விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடிசெய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வா.ராமச்சந்திரன் (29). பி.இ. பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா்.
இவரிடம், விழுப்புரம் கம்பன் நகரைச் சோ்ந்த ரா.கந்தன்(74), நாகா்கோயில் பகுதியைச் சோ்ந்த ஜெரோம் லூா்து ராஜா ஆகியோா் கடந்த 5.1.2021 அன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை உண்மையென நம்பிய ராமச்சந்திரன், வேலைக்காக ரூ.9 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில் பணம் கொடுத்து 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கந்தன், ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் ரூ.2.50 லட்சம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6.50 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் கந்தன் மற்றும் ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 போ் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



