குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பணப் பிரச்னை: இருவா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 மே 2026, 2:23 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பணப் பிரச்னையால் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

விழுப்புரம், வி.மருதூா், மேல்குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ம.மணிகண்டன்(46). இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், சனிமூலை தெருவைச் சோ்ந்தவா் பா. மகேஷ்வரன் (50). திருமணம் ஆனவா். மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், மகளுக்குத் திருமணம் செய்ய வசதியில்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த மகேஷ்வரன் மே 21-ஆம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த வந்த மகேஷ்வரன், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.