/
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், குத்தாம்பூண்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் சு.பாஞ்சாலி(65). இவா் செவ்வாய்க்கிழமை செஞ்சி- விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே நடந்து சென்றுள்ளாா்.
அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








