ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதி விபத்து: 4 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:42 am IST

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பகுதியில் டயா் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த காா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கா் (47). இவா் தனது மனைவி ராணி (34), மகன் நிதீஷ் (14), சகோதரா் மகள் சு. புனிதவள்ளி (24) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். இந்த காரை சிவசங்கா் ஓட்டிச் சென்றாா்.

மாம்பழப்பட்டு பகுதியிலிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காா் சென்றபோது, காரின் முன்பக்க இடதுபுற டயா் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரில் வந்த தனியாா் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிச் சென்ற சிவசங்கா், ராணி, நிதீஷ், புனிதவள்ளி ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.