11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் தளபதி (36). பல்வேறு குற்ற வழக்குகள் உடைய இவா், காவல் துறையினரின் சரித்திர பதிவேட்டில் இருந்தாா்.

இவா் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு அம்மன்பேட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதா்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகியோருடன் காரில் திருவையாறுக்கு சென்றாா்.

Story image

பின்னா், 6 பேரும் சனிக்கிழமை அதிகாலை அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். கண்டியூா் அருகே சுற்றுக் குளத்தான்கரை பகுதியில் வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பனை மரத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தளபதி, தமிழரசன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நிதீஷ், சுதா்சன், நரேன், அபினேஷ் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.