மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 2:37 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், கூட்டடி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.அய்யனாா் (50), தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டிலிந்து வெளியேறிய பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அய்யனாா் அதே பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவருக்கு பூங்காவனம் என்ற மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனா்.