விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உரியிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபு சமுத்திரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.அல்லிமுத்து(52). இவா், தனது பைக்கில் சனிக்கிழமை இரவு அரியலூா்-கெண்டியங்குப்பம் சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதில் பலத்த காயமடைந்த அல்லிமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரியூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
வாடிப்பட்டி அருகே சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



