அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் மகாலிங்கம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மனோகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000, அரசு ஊழியர்களை போல் மருத்துவ நிதி திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.
குடும்பப் பாதுகாப்பு நிதி திட்ட உதவித்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு இலவச பஸ் பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


