நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.

Updated On :13 மே 2013, 12:27 am IST

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.

சங்க மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் மகாலிங்கம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மனோகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000, அரசு ஊழியர்களை போல் மருத்துவ நிதி திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்பு நிதி திட்ட உதவித்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு இலவச பஸ் பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.